Wednesday, November 21, 2007

புனித கூட்டாளிகளின் முகமூடிகள்!

நந்திகிராம் - இது ஒரு குக்கிராமத்தின் பெயரல்ல இன்று. உலகத்தின் கண்கள் நந்திகிராமத்தை நோக்கியே உள்ளன. அங்கே உண்மையில் என்னதான் நடந்துக் கொண்டிருக்கிறது? 30 ஆண்டு மேற்குவங்க ஆட்சி இடதுசாரி வரலாற்றில் ஓர் சரித்திரம். நந்திகிராம் வாயிலாக அது உலகத்தின் அத்துனை மூலை முடுக்குகளுக்கும் சென்றுள்ளது. நந்திகிராம் மேற்குவங்க அரசை வீழ்த்துமா? என்ற கேள்விகள் யாருடைய நலனை காப்பதாக இருக்கும்! அதற்குள்தான் ஒளிந்திருக்கிறது ரகசியம்!

உலக வரலாற்றில் பிரஞ்சு புரட்சி முதல் ரஷ்ய புரட்சி வரை அதன் இளம் பருவத்திலேயே கொத்தி குதறத் துடித்தவர்களின் செஸ் கேம் தற்போது நந்திகிராமத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது! யாருடைய நலனை காப்பதற்காக?

பாசிஸ்ட்டுகளை நாம் அடையாளம் காட்டத் தேவையில்லை! இந்தியாவில் அது மோடியிசமாகவும் - அத்வானியிஸமாகவும் உருவெடுத்துள்ளதை நாம் கூறித்தான் தெரிய வேண்டும் என்பதில்லை!

ஆனால் பயங்கரவாதம் அப்படியல்ல! பயங்கரவாதம் என்றால் நமக்கு அந்த ஒல்லியான உருவம்தான் ஞாபகம் வருகிறது. அதுதான் பின்லேடன்! அவன் மட்டுமா பயங்கரவாதி? ஈராக்கிலும் - ஆப்கானிஸ்தானிலும் 5 லட்சத்திற்கும் மேற்பட்டோரை கொன்றுக் கொண்டிக்கும் ஏகாதிபத்திய அமெரிக்காவையும் அதன் கூட்டாளிகளையும் என்ன வென்று அழைப்பது!

பயங்கரவாதம் இவர்களுக்கு மட்டும் உரியதா என்ன? மாவோயிஸம் என்ற பெயரில் நக்சல்பாரியில் தோற்றவர்கள் நந்திகிராமத்தில் பாசிஸ்டுகளோடு கூட்டு சேர்ந்து வருகிறார்கள்? அவர்களின் புதிய வர்க்க கூட்டாளிகள் அத்வானியும் - அம்மா மமதாவும் என்பதை இன்று உலகம் அறிந்து கொண்டது! மேற்குவங்க மக்கள் மட்டும் அல்ல நாமும்தான் கேட்கிறோம் யாருடைய நலனை காப்பதற்காக இந்த புனிதக்கூட்டு!

நந்திகிராமில் நடப்பது என்ன? இதே உங்களிடையே உண்மைகளை உரைக்க வருகிறது. இந்த வலைப்பதிவு. பதிவு செய்வோம் நமது கருத்துக்களை ஒரே குடையின் கீழ். நவீன பாஸிஸ்ட்டுகளை - உழைக்கும் மக்கள் விரோதிகளை தோலுரிப்போம்!

No comments: